Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு வி‌ஷம் கொடுத்து காரில் கடத்த முயற்சி!

சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவியை காரில் வந்த மூன்று பெண்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்திய பெண் வாயில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்துள்ளனர். 

chennai School student kidnap attempt
Author
Chennai, First Published Dec 4, 2018, 3:32 PM IST

சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவியை காரில் வந்த மூன்று பெண்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்திய பெண் வாயில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்துள்ளனர். 

கிழக்கு தாம்பரம் கண்ணகி தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி, சேலையூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இன்று வழக்கல் போல மாணவி பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலையூர் புத்தர் தெரு வழியாக நடந்து சென்றபோது காரில் வந்த 3 பெண்கள் மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

 chennai School student kidnap attempt

திடீரென அந்த 3 பெண்கள் மாணவியை காரில் கடத்தி வாயில் வி‌ஷத்தை ஊற்றியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த மாணவி அலறல் சத்தத்துடன் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உஷாரான 3 பெண்கள் காரில் இருந்த பெண்ணை தள்ளி விட்டு தப்பித்து சென்றனர். இதனையடுத்து மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். chennai School student kidnap attempt

மாணவியை கடத்த முயன்ற பெண்கள் யார்? அதற்கான காரணம் என்ன என்று இதுவரை தகவல் எதுவும் தெரிவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி  கேமிராக்களை ஆராய்ந்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios