Asianet News TamilAsianet News Tamil

நடத்தையில் சந்தேகம்... மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்து கொன்ற கணவர்... நொடியில் அரங்கேறிய பயங்கரம்..!

சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் அப்பெண்ணை கொடூரமாக குத்திக்கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Husband Killed Wife...police investigation
Author
Tamil Nadu, First Published Oct 14, 2019, 5:47 PM IST

சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் அப்பெண்ணை கொடூரமாக குத்திக்கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்டப்பன் (35). 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 10 மாதங்களாக, தனது தாயாரின் வீட்டில் குழந்தைகளோடு சுமதி வசித்து வந்தார். இதுதொடர்பான புகாரும் பூவிருந்தவில்லி காவல் நிலைய விசாரணையில் உள்ளது. 

Chennai Husband Killed Wife...police investigation

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டிற்கு சென்ற சுமதியை, அவரது கணவன் பின்தொடர்ந்து வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் கணவர் அடித்துள்ளார். மயங்கி விழுந்த மனைவியின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டான்.

Chennai Husband Killed Wife...police investigation

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மனைவியை படுகொலை செய்த கொலையாளி கிட்டப்பன் போலீசில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சுமதிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர், கணவனால் கொலை செய்யப்பட்டது போன்றே, தற்போது, சுமதியும், கணவனாலேயே கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios