Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொடூர கொலை...? பொள்ளாச்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் திகில்..!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

brutal killing college student
Author
Tamil Nadu, First Published Apr 7, 2019, 10:50 AM IST

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. brutal killing college student

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

brutal killing college student

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முட்புதருக்குள் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கல்லூரியில் இருந்து காணாமல் போன மாணவி பிரகதி என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இதனை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. brutal killing college student

மேலும், மாணவி அணிந்திருந்த தங்க நகைகள் திருடு போகாமல் அப்படியே இருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறியது முதல் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அப்பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios