இசைக்கலைஞராக மாறிய விஜய் சேதுபதி!
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, தயாரிப்பாளர் இசக்கி துரை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் "மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, தயாரிப்பாளர் இசக்கி துரை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் "மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார்.
பேரான்மை, புறம் போக்கு, படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை, கொண்டாட்டங்களை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசும் படமாக உருவாகிறது .
"மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தற்போது கதாநாயகிகளின் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.