கேரள பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் சண்டை மூட்டி விட்ட கோபிநாத்...!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத்தும் அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ஏற்கெனவே இவர் வரதட்சணை பற்றி நடத்திய நிகழ்ச்சி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இதே போல் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இது கேரள பெண்கள் vs தமிழ் பெண்கள் என்கிற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் கேரளப்பெண்கள் அழகா அல்லது தமிழ்ப் பெண்கள் அழகா என்பது போன்று சித்திரிக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. இதுகுறித்த முன்னோட்ட வீடியோ சமூகத் தளங்களில் பரவலானது. அதில், கேரளப் பெண்கள் தமிழ்ப் பெண்கள் தங்களுடைய கண், சிரிப்பு, முடி ஆகியவற்றைப் பார்த்து அழகாக இருப்பதாகக் கருதுகின்றனர் என்று தாக்கிப் பேசுகின்றனர்.
அதே போல் தமிழ்ப் பெண்கள் பல வண்ணத்தில் இருக்கும் பாவாடை தாவணி தான் அழகு என்று கூற அதற்கு கேரளப் பெண்கள் அணியும் முண்டு, மற்றும் புடவைகளை ஏன் தமிழ்ப் பெண்கள் அணிய ஆசைப்படுகின்றனர் என கேள்வி எழுப்புகின்றனர்.
ஒருகட்டத்தில் இரண்டு அணியைச் சேர்த்த பெண்களும் நடனமாடியும் கூட, தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என மோதிக்கொள்ளும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.