ஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?
நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்பு தான் அடுக்கடுக்காக தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கு அவருடைய குடும்பத்தினரும் எந்த ஒரு தடையும் போடாமல், சமந்தாவின் வேலையை சுதந்திரமாக செய்ய அனுமதித்துள்ளனர்.
நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்பு தான் அடுக்கடுக்காக தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கு அவருடைய குடும்பத்தினரும் எந்த ஒரு தடையும் போடாமல், சமந்தாவின் வேலையை சுதந்திரமாக செய்ய அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சமந்தா தற்போது, தன்னுடைய செல்ல பிராணியின் புகைப்படத்தை போட்டு, கணவர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதற்கு காரணம், அவரது செல்ல பிராணியின் கழுத்தில் உள்ள டேக் தான். அதில், No .1 Husband என எழுதியுள்ளது. இதனால், சமந்தாவின் கணவருடைய ரசிகர்கள் பலர், இது உங்களுடைய கணவரை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது என விமர்சித்து வருகிறார்கள்.
பொதுவாக ரசிகர்கள், எது சொன்னாலும் அதனை மிகவும் சீரியஸாக எடுத்து கொள்ளாமல், கூலாக எடுத்து கொண்டு, அதனை கடந்து செல்லும் சமந்தா இதையும் அப்படிதான் எடுத்து கொள்வாரா? அல்லது ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.