நித்யா சொன்ன வார்த்தை...! உச்ச கட்ட கோபத்தில் கத்திய மும்தாஜ்...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முதல் முறையாக வெடித்துள்ளது சாப்பாட்டு பிரச்சனை. கடந்த சீசன் கூட சமையல் செய்வதில் பல பிரச்சனைகள் வந்தது, ஆனால் முந்தய போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது பிரச்சனை முன்பே வந்து விட்டது என தான் நினைக்க தோன்றுகிறது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், நடிகை ஜனனி ஐயர், நீங்கள் உங்களுடைய டீம் ஆட்களை அழைத்து டிஸ்கஸ் பண்ண வேண்டும் என மிகவும் கோபமாக பேசுகிறார்.
இதனால், சமையல் செய்யும் குழுவின் இடையே எதோ பிரச்சனை வெடிக்கிறது. இதற்கு நடிகை மும்தாஜ், தான் இதை புகாராக கூறவில்லை என்று கூறி நான் முட்டாள் ரோபோ கிடையாது என கத்துகிறார்.
இதற்கு ஜனனி எதோ கூற வர, மும்தாஜ் தான் பேசும் போது யாரும் இடையே பேச வேண்டாம் என கூறுகிறார். மீறி தலைவி ஜனனி பேச வாய்யெடுத்த போது லீவ் இட் என கோபமாக கூறுகிறார் மும்தாஜ்.
பின் இந்த ப்ரோமோவில், நடிகர் பாலாஜியின் மனைவி நித்திய, நாளைக்கு என்ன பண்ணப்போகிறோம் என்பதை முன்பே தீர்மானித்துக்கொள்ளலாம் என கூற, மும்தாஜ் டன், போய் தலைவியிடம் சொல்லுங்கள் என மிகவும் சத்தமாக சிங்கம் போல் கர்ஜித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இன்றைய #பிக்பாஸ் இன் இரண்டாவது ப்ரோமோ! #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/la9QxeR5zj
— Vijay Television (@vijaytelevision) June 20, 2018