’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் நேற்று காலை திருவனந்தபுரம் டிஜிபியை சந்தித்து தனது கையால் எழுதப்பட்ட புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் பிரபல இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.
தன்னையும் தனது நண்பர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தி வருவதாகவும் மேலும் தனது உயிருக்கே ஆபத்து இருப்பதாக அஞ்சுவதாகவும் பிரபல மலையாளப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது நடிகை மஞ்சு வாரியர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் நேற்று காலை திருவனந்தபுரம் டிஜிபியை சந்தித்து தனது கையால் எழுதப்பட்ட புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் பிரபல இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்த புகாரை உறுதிப்படுத்த சில டிஜிட்டல் ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார்.
முன்னதாக சில விளம்பரப்படங்களில் சேர்ந்து வேலை செய்த வகையில் ஏற்பட்ட நட்பால் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக’ஓடியன்’என்ற படத்தில் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவரத் தொடங்கின. வயநாட்டில் ஒரு பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதாக உறுதியளித்ததால், அது நிறைவேற்றப்படாததால் மோசடி செய்ததாகவும் மஞ்சு வாரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.1.88 கோடி ரூபாய் செலவழித்து 57 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்படும் என்று மஞ்சு வாரியர் அறக்கட்டளை பனமரம் பஞ்சாயத்தில் உள்ள பரகுனியில் பனியா சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.
இது தொடர்பான கடிதம் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் பனமரம் கிராம பஞ்சாயத்துக்கு ஜனவரி 20, 2017 அன்று வழங்கப்பட்டது. பின்னர், எஸ்சி / எஸ்டி துறை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், வீட்டுத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழங்குடியினர் குற்றம் சாட்டியிருந்தனர். மாநிலத்தை அழித்த 2018 வெள்ளத்தில், இந்த வட்டாரத்தில் பெரிய அழிவு ஏற்பட்டது.அறக்கட்டளை உதவி உறுதியளித்ததால், அரசாங்க அதிகாரிகள் யாரும் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் உதவியும் வழங்க முன்வரவில்லை. ஆனால் அறக்கட்டளை எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதலங்களில் தன் சம்பந்தமாக வரும் அத்தனை அவதூறுகளுக்கும் காரணம் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தான் என்று முடிவு செய்தே மஞ்சு வாரியர் போலீஸில் புகார் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.