எடப்பாடியை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவித்த விஜய்….மெர்சல் மகிழ்ச்சி !!!
மெர்சல் திரைப்படம் பிரச்சனையின்றி வெளிவர உதவி செய்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்.
மெர்சல் திரைப்படம் தீபாளியன்று வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் அறிவித்திருந்தனர்.
ஆனால் அந்தப்படத்துக்கு தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டன. முதலலி படத்தின் டைட்டில் தொடர்பாக எழுந்த பிரச்சனையை நீதிமன்றமே முடித்து வைத்தது. இதையடுத்து விலங்குகள் நல வாரியம் படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.
எடப்பாடியுடனானா சந்திப்புக்குப் பிற்கு , விலங்குகள் நலவாரியம் 'மெர்சல்' படத்திற்கு இரண்டு கட்'களுடன் சான்றிதழ் கொடுத்தது. எனவே 'மெர்சலுக்கு' ஏற்பட்டிருந்த அனைத்து தடைகளும் நீங்கியது.
இதையடுத்து இன்று காலை மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்றிரவு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகர் விஜய், மெர்சல் திரைப்படம் பிரச்சனை இன்றி வெளியாக உதவி செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.