நடிகை ரிச்சாவுக்குத் திருமணம்... ஆனால் சிம்பு, தனுஷ், செல்வாவுக்கு இன்விடேஷன் வராது...
பேரழகும் திறமையும் கொண்ட, ஆனால் ராசியில்லா நடிகை என்று பெயரெடுத்த ரிச்சா கங்கோபாத்தியாய் தனது வெளிநாட்டுக் காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவரே வெளியிட்டிருக்கிறார்.
பேரழகும் திறமையும் கொண்ட, ஆனால் ராசியில்லா நடிகை என்று பெயரெடுத்த ரிச்சா கங்கோபாத்தியாய் தனது வெளிநாட்டுக் காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவரே வெளியிட்டிருக்கிறார்.
தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரிச்சா தமிழில் தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ சிம்புவுடன் ‘ஒஸ்தி’ என்ற இரண்டே படங்களில் நடித்தார். இதில் ‘மயக்கம் என்ன’ படத்திற்காக நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றார். ஆனால் அந்த இரு படங்களின் மூலம் கிடைத்த கசப்பான அனுபவங்களால் தமிழ்த் திரையுலகை விட்டுத் தப்பி ஓடி ஒன்றிரண்டு பெங்காலிப் படங்களில் நடித்த கையோடு திரையுலகுக்கே முழுக்குப் போட்டார்.
பின்னர் வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் உள்ள ஒலின் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்.பி.ஏ. படிக்கத்துவங்கினார். அந்த படிப்பின்போது சந்தித்த ஜோ லெங்கல்லா என்பவருடன் காதல் வசப்பட்ட ரிச்சா தற்போது மிக விரைவில் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்தத் திருமணத்துக்கு தனுஷ், சிம்பு, செல்வராகவன் ஆகிய மூன்றுபேருக்குமே அழைப்பிதழ் வராது என்கிற ஒரு தகவலை மட்டும் இப்போதே அடித்துக்கூறலாம்.