நான் பார்த்ததில் சுத்த தங்கம் இவர்தான்...! பிரபல தமிழ் நடிகர் பற்றி கூறிய ஸ்ரீரெட்டி...!
கடந்த மாதம், தெலுங்கு சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். ரசிகர்கள் மனதில் நல்ல நடிகர், நல்ல மனிதர் என பார்க்கப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றத்தை முன்வைத்து டேமேஜ் செய்து விட்டார்.
இதனால் பலர் இவர் மீது செம கடுப்பில் இருந்தாலும், இது குறித்து ஒருவர் கூட முன்வந்து ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவிக்கவில்லை. நேற்றயம் தினம் நடிகர் கார்த்தி கூட, ஸ்ரீரெட்டி அத்துமீறி செயல்படுகிறார் என்றும், அவர் மீது புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை நாட்கள் நடிகர்கள் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களையே வெளியிட்டு வந்த ஸ்ரீரெட்டி. முதல் முறையாக பிரபல தமிழ் நடிகர் ஒருவரை சொக்க தங்கம் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறுகையில்... 'ஒரு முறை பிரபல நடிகர் கரண்ணை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் என்னுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வருவதாக கூறினார்.
அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என 'நான் பிகினி ஆடையில்' காத்திருந்தேன். ஆனால் அவர் அவருடைய குடும்பத்துடன் வந்து எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இதுவரை நான் சந்தித்ததில் மிகவும் நல்ல மனிதர் கரண் என முதல் முறையாக ஒரு நடிகர் பற்றி ஸ்ரீரெட்டி கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.