மோடி வேஷ்டி கட்டியதால் சீனாவில் வெறித்தனமாகப் பரவும் தமிழ்ப்பற்று...படு ஆபத்தான வீடியோ...
இளையராஜாவின் ‘பொன்னப்போல ஆத்தா...என்னைப்பெத்துப் போட்டா’பாடலை சீனப் பிரஜை ஒருவர் வெறித்தனமாய் கொலை செய்யும் பாடல் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ‘திட்டித் திட்டிப் பேசினாலும் வட்டியில சோறு வைப்பா’என்று அவஸ்தைப்படும்போது நமக்கு சாப்பாட்டின்மீதே வெறுப்பு வந்துவிடுகிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தால் சீன அதிபரை மகாபலிபுரத்துக்குள் அனுமதித்திருக்கமாட்டோம் என்று ஒவ்வொரு தமிழரும் நொந்துபோகும்படி, இளையராஜாவின் ‘பொன்னப்போல ஆத்தா...என்னைப்பெத்துப் போட்டா’பாடலை சீனப் பிரஜை ஒருவர் வெறித்தனமாய் கொலை செய்யும் பாடல் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ‘திட்டித் திட்டிப் பேசினாலும் வட்டியில சோறு வைப்பா’என்று அவஸ்தைப்படும்போது நமக்கு சாப்பாட்டின்மீதே வெறுப்பு வந்துவிடுகிறது.
மோடி வேஷ்டி கட்டியவுடன் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழி மீதான மவுசு அதிஅகரித்து வருகிறது என்று முழங்கத் துவங்கியிருக்கும் பா.ஜ.க.வினருக்கு இப்பாடல் சமர்ப்பணம்...இசை ரசிகர்கள், குறிப்பாக இளையராஜா ரசிகர்கள் இந்த வீடியோ, ஆடியோவைக் கேட்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்....